states

ஜம்மு - காஷ்மீர் : இன்று முதற்கட்டத் தேர்தல்

ஸ்ரீநகர், செப். 17 - ஜம்மு - காஷ்மீரில், மூன்று கட்டங் களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலை யில், முதற்கட்டமாக 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு புதன்கிழமையன்று (செப்.18) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

காஷ்மீர் பிராந்தியத்தில் 16 தொகு திகள், ஜம்மு பகுதியில் 8 தொகுதிகள் என 7 மாவட்டங்களில் அமைந்திருக்கும் இந்த 24 தொகுதிகளில், 23 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இவர் களுக்காக மொத்தம் 3276 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 219 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

காங்கிரஸ்- தேசிய மாநாட்டு கட்சி, சிபிஎம் கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் மாநிலக் கட்சிகள் தனித்தனியாகவும் களம் காண்கின்றன.  ஒன்றிய பாஜக அரசால் பறிக்கப்பட்ட அரசியலமைப்பு பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வரு வோம்; மாநில அந்தஸ்தை மீட்டெ டுப்போம் என்பதே எதிர்க்கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளாக முதன்மை பெற்றுள்ளன. பத்தாண்டுகளுக்குப் பிறகு (2014-ஆம் ஆண்டுக்குப் பின்), அதுவும் உச்ச நீதிமன்ற உத்தரவுப் பிறகே ஜம்மு - காஷ்மீரில் தற்போது தேர்தல் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.